BREAKING NEWS   PM Anwar suggests that every leader, including the PM & ministers, look after one village and address their issues | Cadangan setiap pemimpin jaga satu kampung akan dibawa ke Mesyuarat Jemaah Menteri, Rabu ini - PM Anwar | PM Anwar cadang setiap pemimpin termasuk Perdana Menteri dan barisan menteri jaga satu kampung, selesaikan isu dihadapi | Perak setuju bekal air kepada Pulau Pinang melalui Taman Perindustrian Hijau Bersepadu Kerian - PM Anwar | Perak has agreed to supply water to Penang through the Kerian Integrated Green Industrial Park - PM Anwar  | 
 பொது

போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பு; மந்திரி புசார் மகனுக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

25/04/2024 06:32 PM

கங்கார், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆறு லட்சம் ரிங்கிட் மதிப்புடைய போலியான ஆவணங்களை சமர்ப்பித்த வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்ட மந்திரி புசார் மகனின் தடுப்பு காவல் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் நால்வரின் தடுப்பு காவலும் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ள வேளையில் மாநில அரசாங்க செயலகத்தின் அதிகாரி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் செக்‌ஷன் 18-இன் கீழ் விசாரணைக்கான விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு மாஜிஸ்திரேட் அனா ரோசானா முஹமட் நோர் அந்த தடுப்புக் காவலை நீடித்தார்.

26 முதல் 37 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை காலை 7 முதல் 8 மணிக்குள் பெர்லிஸ் சுற்றுவட்டாரத்தில்  கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படாதபோது, ​​போலியான கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்களை பயன்படுத்தியது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

புத்ராஜெயாவின், எஸ்பிஆர்எம் சிறப்பு ந்டவடிக்கைப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ அஸ்மி கமாருசாமான் அக்கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)