BREAKING NEWS   Sultan of Selangor strongly condemns the 'immoral' acid attack on Faisal Halim, wants police to conduct a thorough probe  | Sultan of Selangor prays for Faisal Halim's swift recovery and eventual return to Selangor FC | Sultan of Selangor expresses concern over the acid attack on Faisal Halim | Simbahan asid terhadap Faisal Halim: Sultan Selangor kecam sekeras-kerasnya serangan tidak bermoral, mahu polis siasat kejadian ke akar umbi | Sultan Selangor doakan Faisal Halim kembali sihat, dapat teruskan khidmat kepada Selangor FC | 
 பொது

6 லட்சம் மதிப்புடைய போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பு; மேலும் சிலர் கைது செய்யப்படலாம்

25/04/2024 06:37 PM

குவா மூசாங், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த ஈராண்டுகளில் ஆறு லட்சம் ரிங்கிட் மதிப்புடைய போலியான ஆவணங்களை சமர்ப்பித்த வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக மந்திரி புசார் மகன் உட்பட அறுவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம் நேற்று கைது செய்திருந்த வேளையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அவ்வழக்கு தொடர்பில் சம்பந்தப்பட்டோரின் தவறுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கவே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக எஸ்பிஆர்எம்  தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

"இவ்வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் நபர்களை தவறுகளை அடையாளப்படுத்த மேலும் சில தரப்பினர் அழைக்கப்படலாம் என்பதோடு அவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது," என்றார் அவர்.

இன்று, குவா மூசாங்கில் உள்ள கூட்டரசு கட்டிடத்தில் எஸ்பிஆர்எம் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

இவ்வழக்கில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)