BREAKING NEWS   PM Anwar suggests that every leader, including the PM & ministers, look after one village and address their issues | Cadangan setiap pemimpin jaga satu kampung akan dibawa ke Mesyuarat Jemaah Menteri, Rabu ini - PM Anwar | PM Anwar cadang setiap pemimpin termasuk Perdana Menteri dan barisan menteri jaga satu kampung, selesaikan isu dihadapi | Perak setuju bekal air kepada Pulau Pinang melalui Taman Perindustrian Hijau Bersepadu Kerian - PM Anwar | Perak has agreed to supply water to Penang through the Kerian Integrated Green Industrial Park - PM Anwar  | 
 உலகம்

ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 1.5 மீட்டர் மழைப் பொழிவு

24/04/2024 07:30 PM

ஓரன்பர்க், 24 ஏப்ரல் (பெர்னாமா) -- ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அந்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1.5 மீட்டர் மழைப் பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

13 பாலங்கள் வெள்ளதால் அடித்துச் செல்லப்பட்டதால், பல கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சுமார் 3500 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

ஓரன்பர்க் மாவட்டத்தில் 19,700 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலைமையை கண்காணிக்க மீட்புப் பணியாளர்கள் ஆளலில்லா விமானங்களை பயன்படுத்துகின்றனர்.

அந்நாட்டின் 10 மாவட்டங்களில் அவசரகால நிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வெள்ளத்தினால் இதுவரை எழுவர் உயிரிழந்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502