BREAKING NEWS   Sultan of Selangor strongly condemns the 'immoral' acid attack on Faisal Halim, wants police to conduct a thorough probe  | Sultan of Selangor prays for Faisal Halim's swift recovery and eventual return to Selangor FC | Sultan of Selangor expresses concern over the acid attack on Faisal Halim | Simbahan asid terhadap Faisal Halim: Sultan Selangor kecam sekeras-kerasnya serangan tidak bermoral, mahu polis siasat kejadian ke akar umbi | Sultan Selangor doakan Faisal Halim kembali sihat, dapat teruskan khidmat kepada Selangor FC | 
 அரசியல்

லீயின் வழியைப் பின்பற்றி கேகேபி மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவேன் - பாங் உறுதி

25/04/2024 05:38 PM

கோலா குபு பாரு, 25 ஏப்ரல் (பெர்னாமா) -- கோலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தைப் பிரதிநிதித்து வேட்பாளராக களமிறங்கி இருக்கும் பாங் சொக் தாவ், மறைந்த லீ கி ஹியோங்கின் வழியைத் தொடரவும் அத்தொகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் உறுதி கொண்டுள்ளார்.

மறைந்த லீ, ஜசெகவில் உள்ள பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்ததோடு, ஜனநாயக மற்றும் நேர்மையான கொள்கைகளை கொண்டிருந்ததாகவும் பாங் கூறினார். 

இதற்கு முன்னர் இரண்டு அமைச்சுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு இச்சட்டமன்றத் தொகுதியில், சிறந்த வளர்ச்சியை தாம் கொண்டு வர எண்ணம் கொண்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.

"எனக்கு 31 வயதுதான் ஆகிறது. ஆனால், நான் அரசியலில் 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய ஈடுபாட்டை எஸ்.ஜி சகோதரர்கள் பகிர்ந்துகொண்டனர். சுற்றுச்சூழல், வீட்டுவசதி மற்றும் ஊராட்சி மற்றும் எரிசக்தி அறிவியல் ஆகிய இரு அமைச்சுகளிலும் நான் பெற்ற அனுபவம் கோலா குபு பாரு சட்டமன்றத்தில் சாதகமான வளர்ச்சியை எனக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று பெரிதும் நம்புகிறேன்," என்றார் அவர்.

இதனிடையே, தம் மீது கட்சித் தலைமைத்துவம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், இந்த இடைத்தேர்தலில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் வேட்பாளராகவும் தாவ் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)