BREAKING NEWS   Saifuddin Nasution will meet US Treasury department’s top sanctions official Brian Nelson tomorrow to convey the country's official stance | Saifuddin Nasution akan bertemu pegawai tertinggi AS Brian Nelson esok, sampaikan pendirian rasmi negara | MMEA will receive four AW189 helicopters within the next two years - Saifuddin Nasution | Selangor government hopes MFL and JDT will seriously consider Selangor FC's request to postpone the Sumbangsih Cup matches - MB | APMM bakal terima empat helikopter AW189 dalam masa dua tahun - Saifuddin Nasution | 
 அரசியல்

கேகேபி இடைத்தேர்தல்; ஜசெகவின் பாங் சொக் தாவ் களமிறங்குகிறார்

25/04/2024 05:32 PM

கோலா குபு பாரு, 25 ஏப்ரல் (பெர்னாமா) -- வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள, சிலாங்கூர் கோலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் வேட்பாளராக ஜனநாயக செயல் கட்சி, ஜசெகவின் பாங் சொக் தாவ் களமிறங்குகிறார்.

அதனை, அக்கட்சியின் பொது செயலாளர் அந்தோணி லோக் நேற்றிரவு கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான சேவை மையத்தில் அறிவித்தார்.

பாங் சொக் தாவ் , வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மெங்கின் 
பத்திரிகை செயலாளர் ஆவார். 

"எனவே, கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பிரதிநிதியாக பாங் சொக் தாவ்வை நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்," என்றார் அவர்

31 வயதுடைய பாங் சொக் தாவ் சிலாங்கூர் அம்பாங்கைச் சேர்ந்தவர்.

மேலும், தேசிய மின்சார பல்கலைக்கழமான UNITEN-இல் மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் இவர் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.  

ஜசெகவுக்கு சொந்தமான UBAH தொலைக்காட்சியிலும் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய அனுபவத்தையும் தாவ் கொண்டிருக்கின்றார். 

கடந்த மார்ச் 21 தேதி கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த 58 வயதுடைய லீ கி ஹியோங் புற்றுநோயால் காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகின்றது.

அதன் வாக்களிப்பு மே 11ஆம் தேதியும், வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 27ஆம் தேதியும் நடைபெறவிருக்கின்றது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)