BREAKING NEWS   DSA ke-19 dan NATSEC Asia keempat akan diadakan pada 20-23 April 2026 - Mohamed Khaled | The 19th DSA and 4th NATSEC Asia to be held from April 20-23, 2026 - Mohamed Khaled | Bank Negara Malaysia keeps OPR unchanged at 3.0 per cent | BNM mengekalkan OPR pada kadar 3.0 peratus | Veteran singer Datuk A Halim dies in Johor today - Seniman president | 
 அரசியல்

இடைத்தேர்தலை முன்னிட்டு 24 மணிநேர நடவடிக்கை மையத்தைத் தொடங்கியது எஸ்பிஆர்எம்

27/04/2024 06:14 PM

கோலா குபு பாரு, 27 ஏப்ரல் (பெர்னாமா) -- கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலின் போது ஊழல் மற்றும் அதிகார மீறல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் அளிப்பதற்கு ஏதுவாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம், இன்று அதன் நடவடிக்கை மையத்தை தொடங்கியது.

ஷா ஆலமில் உள்ள, சிலாங்கூர் மாநில எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை மையம், இன்று முதல் வாக்களிப்பு தினமான மே 11ஆம் தேதி வரையில் 24 மணிநேரமும் செயல்படும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

எனவே, கையூட்டு மற்றும் அதிகார மீறல் போன்ற குற்றங்கள் செய்வோர் மீது பொதுமக்கள் prk2024_sel@sprm.gov.my என்ற அக்கப்பத்தில் புகார் அளிக்கலாம் என்பதோடு 03-5528318 அல்லது 03- 55256500 என்ற எண்களுக்கும் அழைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

அதேவேளையில், 1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டம் மற்றும் 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் ஆகியற்றிற்கு கீழ் படிந்து, தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எஸ்பிஆர்எம் நினைவூட்டியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)