BREAKING NEWS   His Majesty Sultan Ibrahim King of Malaysia congratulates Singapore DPM Lawrence Wong for being next Singapore PM | His Majesty Sultan Ibrahim King of Malaysia thanked outgoing Singapore PM Lee for being a close friend to Johor and Malaysia | Veteran singer Hail Amir dies at HKL today - Seniman president | Penyanyi Hail Amir meninggal dunia di HKL petang ini - Presiden Seniman | DSA dan NATSEC seharusnya dimanfaatkan sebagai platform bagi merangsang keazaman kolektif dalam menghadapi dan mengatasi kerumitan lanskap keselamatan dan pertahanan moden - PM | 
 உலகம்

கிழக்கு இந்தியாவில் உணவகம், தங்கும் விடுதி தீப்பிடித்ததில் அறுவர் பலி

26/04/2024 11:50 AM

பட்னா, 26 ஏப்ரல் (பெர்னாமா) -- கிழக்கு இந்தியாவில் உள்ள உணவகம் மற்றும் தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் குறைந்தது அறுவர் உயிரிழந்தனர்.

மேலும், 20 பேர் காயத்திற்கு ஆளாகினர்.

பட்னாவிலுள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் உணவு உட்கொண்டிருந்தபோது சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு கலன் வெடித்ததாக பிஹார் மாநில தீயணைப்பு அதிகாரி சத்ய பிரகாஷ் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தீ அருகில்லுள்ள தங்கும் விடுதிக்கும் பரவியதாக அவர் குறிப்பிட்டார்.

பாட்னாவின் இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள நெரிசலான பகுதியில் அந்தத் தங்கும் விடுதி உள்ளது.

இச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்களும் தீக்கிரையானதாக பிரகாஷ் கூறினார்.

இந்தியாவில் தீ விபத்துகள் நிகழ்வது வழக்கமாகும்.

அங்கு கட்டிட மேம்பாட்டாளர்களும் குடியிருப்பாளர்களும் பெரும்பாலும் கட்டிடச் சட்டங்கள் மற்றும் பாதுகாப்புக் குறியீடுகளை மீறுவதால் இத்தகையச் சம்பவங்கள் நிகழ்கின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)