BREAKING NEWS   Sultan of Selangor strongly condemns the 'immoral' acid attack on Faisal Halim, wants police to conduct a thorough probe  | Sultan of Selangor prays for Faisal Halim's swift recovery and eventual return to Selangor FC | Sultan of Selangor expresses concern over the acid attack on Faisal Halim | Simbahan asid terhadap Faisal Halim: Sultan Selangor kecam sekeras-kerasnya serangan tidak bermoral, mahu polis siasat kejadian ke akar umbi | Sultan Selangor doakan Faisal Halim kembali sihat, dapat teruskan khidmat kepada Selangor FC | 
 பொது

வெளிநாட்டுப் பேச்சாளர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியினை உடனடியாக  ரத்து செய்ய சம்ரி உத்தரவு

25/04/2024 06:02 PM

புத்ராஜெயா, 25 ஏப்ரல் (பெர்னாமா) -- மலாயா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டுப் பேச்சாளர் ஒருவர் கலந்து கொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளை உடனடியாக ரத்து செய்யுமாறு உயர்க்கல்வி அமைச்சர்  டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர்  உத்தரவிட்டுள்ளார்.

சமூகத்தின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலும், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவும், சமூக ஊடகங்களில் நேற்று முதல் பரவி வரும் அவரின் அறிக்கைகள் குறித்து  உயர்க்கல்வி அமைச்சு கடுமையாகக் கருதுவதாக அவர் கூறினார்.

"உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய நான் ஏற்கனவே மலாயாப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து விளக்கத்தை பெற்றேன். பல்கலைக்கழக துணைவேந்தரும் அதுகுறித்த விளக்கமளிப்பு அறிக்கையை உடனடியாக வெளியிட்டார். அதில் எதற்காக  இத்தகைய நபர் உரையாற்ற அழைக்கப்பட்டார்?அல்லது வெளிநாட்டு விரிவுரையாளராக அழைக்கப்பட்டதன் காரணமும் அதில் இடம்பெற்றிருந்தது," என்றார் அவர்.

மேலும், உயர்க்கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் கல்விக் கழகங்களும் எந்தவொரு தனிநபரையோ அல்லது மற்ற தரப்பினரையோ ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பதற்கு முன்னதாக அவர்களின் பின்னணி குறித்து கவனமாக தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்று அவர் நினைவூட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)