BREAKING NEWS   Sultan of Selangor strongly condemns the 'immoral' acid attack on Faisal Halim, wants police to conduct a thorough probe  | Sultan of Selangor prays for Faisal Halim's swift recovery and eventual return to Selangor FC | Sultan of Selangor expresses concern over the acid attack on Faisal Halim | Simbahan asid terhadap Faisal Halim: Sultan Selangor kecam sekeras-kerasnya serangan tidak bermoral, mahu polis siasat kejadian ke akar umbi | Sultan Selangor doakan Faisal Halim kembali sihat, dapat teruskan khidmat kepada Selangor FC | 
 பொது

அதிகாரப்பூர்வ இறுதி மரியாதையுடனும் கண்ணீரோடும் சிவசுதனின் உடல் தகனம்

25/04/2024 05:48 PM

மஞ்சோங், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- விமானப்படையில் கம்பீரமாக வலம் வந்து வான்வெளியில் சாகசங்கள் செய்து வீட்டிற்கு ஒரே மகனாக பெருமை சேர்த்த 31 வயதுடைய LEFTERNEN சிவசுதன் தஞ்சப்பன்...

குடும்பத்தாரின் கண்ணீர் மழையோடும் அதிகாரப்பூர்வ இறுதி மரியாதையோடும் விடைபெற்றார். 

காற்றில் மூச்சிரைத்து, மண்ணில் உயிர்நீத்த அந்த விமான படை அதிகாரியின்   
நல்லுடல் இந்து முறைப்படி இன்று தகனம் செய்யப்பட்டது.

அவரின் உடலை ஏற்றி வந்த வாகனம் காலை 11:30 மணியளவில் பேராக், சித்தியவான், கம்போங் செர்டாங் அருகேயுள்ள மஞ்சோங் இந்து சபா தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

நண்பகல் 12.15 மணியளவில் தகனம் செய்வதற்கு முன்னதாக சிவசுதனின் உடலுக்கு இந்து சமயத்தின்படி சடங்குகள் செய்யப்பட்டது.

அவரின் உடல்மீது அணியப்பட்டிருந்த, சேவைக்கான பதக்கங்கள் அனைத்தும்  அகற்றப்பட்டு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக, அன்னாரின் இல்லத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரையில் இறுதி சடங்குகள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, பெற்றோர், மனைவி, குடும்பத்தினர், சக பணியாளர்கள் மற்றும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் முன்னிலையில், அரச மலேசிய கடற்படை TLDM-இன் அதிகாரப்பூர்வ இறுதி மரியாதையும் அவருக்கு செலுத்தப்பட்டது.

14 அதிகாரிகள் மற்றும் TLDM உறுப்பினர்கள் முழு சடங்கு உடை அணிந்து மரியாதை செலுத்தினர்.

சிவசுதனின் சவப்பெட்டியில் போர்த்தப்பட்ட TLDM கொடியை,  தியாகத்தைப் போற்றும் அடையாளமாக, மேற்கு கடற்படையின் முதலாவது துணைத் தளபதி ஆர்.ஹரிசுந்தர், தாயார் ஆர்.பரமேஸ்வரியிடம் ஒப்படைத்தார்.

இதனிடையே, ஈப்போ, ராஜா பெர்மைசூரி மருத்துவமனையின் தடயவியல் பிரிவிலிருந்து, நேற்று மாலை 5.52 மணியளவில் சிவசுதனின் நல்லுடல் 
பேராக், சித்தியவான் தாமான் செர்டாங் ஜெயாவில் உள்ள அவரின் பெற்றோர் வீட்டிற்கு  கொண்டு வரப்பட்டது.

மூன்று பிள்ளைகளில் ஒரே ஆண்மகனான சிவசுதன் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் பல் மருத்துவரான டாக்டர் ஹர்ஷினி சந்திரசேகர் என்பவரைத் மணம் புரிந்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)