BREAKING NEWS   Sultan of Selangor strongly condemns the 'immoral' acid attack on Faisal Halim, wants police to conduct a thorough probe  | Sultan of Selangor prays for Faisal Halim's swift recovery and eventual return to Selangor FC | Sultan of Selangor expresses concern over the acid attack on Faisal Halim | Simbahan asid terhadap Faisal Halim: Sultan Selangor kecam sekeras-kerasnya serangan tidak bermoral, mahu polis siasat kejadian ke akar umbi | Sultan Selangor doakan Faisal Halim kembali sihat, dapat teruskan khidmat kepada Selangor FC | 
 சிறப்புச் செய்தி

இரண்டாவது முறையாக மலேசியாவில் MALAYA DANCE FESTIVEL நடன நிகழ்ச்சி

21/04/2024 06:15 PM

கோலாலம்பூர், 21 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபெறும் MALAYA DANCE FESTIVEL எனும் நடன நிகழ்ச்சி ஒன்று மலேசியாவில் விமரிசையாக நடைபெறவிருக்கின்றது.

கடந்த 14 ஆண்டுகளாக இந்தியா, சென்னையில் இயங்கி வரும், நிருத்திய நித்தியாலயா எனும் நுண்கலைக் கழகத்தினர் இந்நிகழ்ச்சியை இம்மாதத்தில் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

வரும் ஏப்ரல் 27ஆம் தேதி பத்துமலை திருத்தலத்தில் பிற்பகல் 3.00 மணி தொடங்கி 8.00 மணி வரையிலும், ஏப்ரல் 28ஆம் தேதி, பிரிக்பீல்ட்ஸ், TEMPLE OF FINE ARTS-சில் காலை 11.00 மணி தொடங்கி இரவு 7.00 மணிவரை MALAYA DANCE FESTIVEL நிகழ்ச்சி நடைபெறும்.

கலை மற்றும் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில் மலேசியா தவறியதில்லை.

அதற்கேற்ப மலேசியாவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துவது ஊக்குவிப்பாக இருப்பதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும் நிருத்திய நித்தியாலயா கழக தோற்றுநருமான முனைவர் செளமியா தாமோதரன் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக மலேசியாவில் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்ற நிலையில், இங்குள்ள மக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைப்பதாக பரத கலைத்துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் செளமியா கூறினார்.

''மலேசியாவில் தமிழுக்கும் கலைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இந்த நாட்டில் எங்களது திறமையை வெளிப்படுத்த இதனை ஒரு நல்ல வாய்ப்பாக நாங்கள் கருதுகின்றோம்,'' என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில், பரதநாட்டியம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநில பாரம்பரிய நடனங்களும் இடம்பெறுவதாக முனைவர் செளமியா கூறினார்.

சுமார் 30-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களைக் கொண்டு இந்நடன நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், கலைஞர்கள் தங்களின் படைப்புகளை வழங்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

''அதிகமான நடன கலைஞர்களை இந்நிகழ்ச்சியில் சேர்க்காமல் குறிப்பிட்ட அளவில் நடனக் கலைஞர்களை வரவேற்கின்றோம். அதோடு, அவர்களது நடன திறமையை வெளிப்படுத்துவதற்கும் தகுந்த நேரத்தை வழங்குகின்றோம்,'' என்றார் அவர்.

கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும் இந்நிகழ்ச்சிக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக, பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில் முனைவர் செளமியா தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502