BREAKING NEWS   Federal agencies told to work with Terengganu govt to eradicate poverty in the state within next two months - PM Anwar  | 1,663 families in Terengganu still in the hardcore poor group as of May 2 - PM Anwar  | Setakat 2 Mei, terdapat 1,663 keluarga masih berada dalam kelompok miskin tegar di Terengganu - PM Anwar  | Agensi Persekutuan diarah buat gerak kerja dengan kerajaan negeri menoktahkan kemiskinan di Terengganu dalam tempoh dua bulan akan datang - PM Anwar  | DSA ke-19 dan NATSEC Asia keempat akan diadakan pada 20-23 April 2026 - Mohamed Khaled | 
 உலகம்

உக்ரேனின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு கூடுதல் ஏவுகணைகள்

27/04/2024 07:05 PM

வாஷிங்டன், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- உக்ரேனின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு கூடுதல் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் தலைமையக கட்டிடம் பெந்தகன் அறிவித்துள்ளது.

அந்நாட்டிற்கான 600 கோடி அமெரிக்க டாலர் கூடுதல் தொகையில் அந்த ஏவுகணைகள் வழங்கப்படும் என்று பெந்தகன் கூறியது.

600 கோடி டாலர் கூடுதல் தொகை, ஒரு நாட்டின் இராணுவத்தை பலபடுத்த வழங்கப்பட்ட மிகப்பெரிய பாதுகாப்பு உதவி நிதி திட்டம் என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர்  லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த முன்பு வழங்கப்பட்ட ஏவுகணைகளுடன் புதிதாக வழங்கப்படும் இந்த ஏவுகணைகள் அந்நாட்டின் இராணுவத்திற்கு கூடுதல் பலத்தை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இவ்வாண்டு நிறைவடையாது என்று பெந்தகன் கணித்திருக்கிறது.

இவ்விரு நாடுகளுக்கு இடையிலான போர் இன்னும் சில ஆண்டுகள் தொடரலாம் என்று அது கூறுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)