BREAKING NEWS   Federal agencies told to work with Terengganu govt to eradicate poverty in the state within next two months - PM Anwar  | 1,663 families in Terengganu still in the hardcore poor group as of May 2 - PM Anwar  | Setakat 2 Mei, terdapat 1,663 keluarga masih berada dalam kelompok miskin tegar di Terengganu - PM Anwar  | Agensi Persekutuan diarah buat gerak kerja dengan kerajaan negeri menoktahkan kemiskinan di Terengganu dalam tempoh dua bulan akan datang - PM Anwar  | DSA ke-19 dan NATSEC Asia keempat akan diadakan pada 20-23 April 2026 - Mohamed Khaled | 
 பொது

ஆதவற்ற இல்லத்தில் முதியவர் தாக்கப்பட்ட விவகாரம்; இல்லம் ஜேகேஎம்-இல் பதிவு செய்யப்படவில்லை

27/04/2024 06:38 PM

கூச்சிங், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- கெடா, பாடாங் செராய், தாமான் டேசா அமானில்  உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர் ஒருவர் தடியால் தாக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அந்த இல்லம் சமூக நலத்துறை, ஜேகேஎம்-இல் பதிவு செய்யப்படாதது கண்டறியப்பட்டுள்ளது.

ஜேகேஎம் தரப்பு மற்றும் போலீசார் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் மேற்கொண்ட விசாரணையில், அந்த தகவல் அம்பலமானதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.

இன்று, கூச்சிங் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நோபுப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நேன்சி அவ்விவகாரம் தொடர்பில் கருத்துரைத்தார்.

அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் உரிமையாளர், 44 வயதான ஆடவர் ஒருவரும் அங்கு உதவியாளராக பணிபுரியும் 36 வயது பெண் ஒருவரும் கடந்த வியாழக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)