BREAKING NEWS   Saifuddin Nasution akan bertemu pegawai tertinggi AS Brian Nelson esok, sampaikan pendirian rasmi negara | MMEA will receive four AW189 helicopters within the next two years - Saifuddin Nasution | Selangor government hopes MFL and JDT will seriously consider Selangor FC's request to postpone the Sumbangsih Cup matches - MB | APMM bakal terima empat helikopter AW189 dalam masa dua tahun - Saifuddin Nasution | Selangor government is ready to assist in providing the best treatment for Faisal Halim's recovery - MB | 
 பொது

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்

26/04/2024 04:50 PM

சிப்பாங், 26 ஏப்ரல் (பெர்னாமா) -- ஊழியர்களின் சேவைக்கு ஏற்றவாறு, சிறந்த விமான நிறுவனம், நல்ல வருமானத்தை வழங்க முடியும்.

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம், எம்.ஏம்.பி-இல் கசிவுகள் தவிர்க்கப்பட்டு, நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு, அதன் நிர்வாகத்தில் போக்குவரத்து அமைச்சு, கசானா நேஷனல் நிறுவனம், மலேசிய விமான குழுமம், எம்.ஏ.ஜி ஆகியவைக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''இடையில் இந்த ஒத்துழைப்பு தொடரும் என்று நம்புகிறேன். ஏனெனில், கசிவுகளைத் தவிர்க்க வெளிப்படைத்தன்மை கொள்கையுடன் ஒரு குழுவாக பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். நாம் நமது நாட்டைக் காப்பாற்றலாம். அதோடு, ஊழியர்களுக்கு சிறந்த போனஸ் மற்றும் ஊதியத்தை வழங்க முடியும். இந்த பிரச்சனையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். ஏனெனில், ஊழியர்களுக்கும் குடும்பம் உள்ளது. அவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்க தகுதியானவர்கள்,'' என்றார் அவர்.

இன்று, சிப்பாங், எம்.ஏ.பி விமானக் கழகத்தின் உருவக மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் அவ்வாறு கூறினார்.

நிர்வாகம், ஒருங்கிணைப்பு, விவேகமான முடிவுகள், சிறந்த மற்றும் வெளிப்படையான நிர்வகிப்பு ஆகியவை ஊழியர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)