BREAKING NEWS   Agong ucap tahniah kepada TPM Singapura Lawrence Wong yang bakal dilantik PM Singapura yang baharu | His Majesty Sultan Ibrahim King of Malaysia congratulates Singapore DPM Lawrence Wong for being next Singapore PM | His Majesty Sultan Ibrahim King of Malaysia thanked outgoing Singapore PM Lee for being a close friend to Johor and Malaysia | Veteran singer Hail Amir dies at HKL today - Seniman president | Penyanyi Hail Amir meninggal dunia di HKL petang ini - Presiden Seniman | 
 பொது

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரின் தடுப்புக் காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு

22/04/2024 05:59 PM

கோத்தா பாரு, 22 ஏப்ரல் (பெர்னாமா) -- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் வருகைத் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரின் தடுப்புக் காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் அஹ்மட் ஷஃபிக் அய்சாட் நஸ்ரி முன்னிலையில் இந்த தடுப்புக் காவல் நீட்டிப்பு உத்தவு பிறப்பிக்கப்பட்டதோடு, அது, ஏப்ரல் 23 தொடங்கி 27-ஆம் தேதி வரை அமலுக்கு வருகிறது.

ஏப்ரல் 15-ஆம் தேதி கோத்தா பாருவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் முன்புறம் கைது செய்யப்பட்ட அச்சந்தேக நபர், முதலில் ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட வேளையில், அது இன்றோடு நிறைவடைகிறது.

அதைத் தொடர்ந்து, 1971-ஆம் ஆண்டு துப்பாக்கிச் சட்டம் செக்‌ஷன் 8 மற்றும் 1960-ஆம் ஆண்டுசுடும் ஆயுதச் சட்டம் செக்‌ஷன் 8-இன் கீழ், விசாரணைக்கு உதவ இந்த தடுப்புக் காவல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிளந்தான் மாநில போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த, சிறப்பு விசாரணை பிரிவு போலீஸ் குழுவின் கடுமையான கட்டுப்பாட்டுடன் இன்று காலை 8.35 மணிக்கு அந்நபர் நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

இம்மாதம் 14-ஆம் தேதி, பின்னிரவு 1.20 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில், அந்நபரின் மனைவியின் மெய்க்காப்பாளர் படுகாயத்திற்கு ஆளானார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)