கோல பிலா, 19 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று காலை குறுக்கோட்டப் போட்டியில் கலந்து கொண்டப் பின்னர், இடைநிலைப்பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்தது.
தாமான் ஃபாத்திமா, கம்போங் கெந்தாம் இடைநிலைப்பள்ளியில் பயிலும் 14 வயதுடைய மாணவர் குறுக்கோட்டப் போட்டியின் போது மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கோல பிலா மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியது.
2016ஆம் ஆண்டு தொடங்கி அவருக்கு இருதய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)