பொது

கோலா குபு வேட்பாளர் ; நம்பிக்கை கூட்டணி விரைவில் அறிவிக்கும்

19/04/2024 07:49 PM

கோலாலம்பூர், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- கோலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை சிலாங்கூர் மாநில  நம்பிக்கை கூட்டணி அடுத்த புதன்கிழமை அறிவிக்கும்.

இதுவரை பல வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதி முடிவு  அன்றைய நாளில் அறிவிக்கப்படும் என்று கோலா குபு பாரு மாநில சட்டமன்றத்திற்கான , நம்பிக்கை கூட்டணியின் இடைத்தேர்தல் இயக்குனர் இங் ஷே ஹான் கூறினார், இது வரை பல வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

''தகுதியானவர்கள் பலர் இருக்க்ன்றனர். சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் அனைவரும் இருக்கிறார்கள், இன்னும் முடிவு எடுக்கவில்லை என்பதால், வேட்பாளர் பட்டியல் நீளமாக உள்ளது.ஏனென்றால் இன்னும் தெரியவில்லை. வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு வரும் புதன்கிழமை வெளியிடப்படும்'', என, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்தார். 

ஜசெக போட்டியிடும் அத்தொகுதியில், மலாய் வேட்பாளர் நிறுத்தப்படுவது தொடர்பான கேள்விக்கு அவர் அவ்வாறு கூறினார். 

கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லி கி யோங்  கடந்த மார்ச் 21-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து, இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

58 வயதான லீ, கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கி அதன் சட்டமன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்தார்.

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)